தினகரன் உதிர்த்த வைரமுத்து
???
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசும் போது அவர் தேவதாசி என ஒரு வெளிநாட்டு கட்டுரையை மேற்கோள் காட்டியிருந்தார். வழக்கமாக ஒரு நிமிட கோபத்துடன் கடந்து போகும் பெரும்பாலான இந்து சமயத்தினர் தங்கள் கோபத்தின் ஆயுளை இம்முறை நீட்டி வைக்க, வைரமுத்து “யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் ஆண்டாள் காலத்தில் “தேவதாசி” என்ற சொல்லுக்கு உயர் அர்த்தம் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார். அவருக்கு இரண்டு கேள்விகள் –
- “தண்ணீர் தேசம்” என்ற உங்கள் கவிதை நடை நாவலை எழுத மீனவர்களுடன் கடலுக்கு சென்று, அவர்களுடன் தற்காலிகமாக வாழ்ந்து, அவர்கள் வாழ்க்கை முறையை புரிந்து ஆராய்ந்து எழுதிய உங்களால் எந்த ஆய்வுமின்றி “தமிழை ஆண்டாளை” பற்றி ஒரு வெளிநாட்டு கட்டுரையை எப்படி அப்படியே ஏற்க முடிந்தது?
- நீங்கள் சொன்ன உயர் அர்த்தத்தில்தான் என்றால், அந்த குறிப்பையும் வெளிநாட்டு கட்டுரை மேற்கோளுடன் சேர்த்தே வைத்திருக்கலாமே?
“எல்லா நதியிலும் என் ஓடம்” எழுதிய நீங்கள் எல்லா தமிழர் மனத்திலும் வீற்றிருக்க இது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
???
வைரமுத்துவின் ஆண்டாள் பேச்சிற்கு எதிர் வினையாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காணொளி கண்டேன். “வெற்றிகொண்டானை” வெற்றி கொண்ட “தீப்பொறி” இருந்தது அவரது பேச்சில். அவருக்கு ஒரே கேள்வி – “உங்கள் கோபத்தின் நியாயத்தை காட்ட இவ்வளவு கீழ்த்தரமான பேச்சு தேவையா?”. அது போக, உங்களது இந்த பேச்சால் வைரமுத்துவை கண்டிக்க வேண்டியவர்கள் கூட அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள். பெரும்பான்மை இந்துக்களே முகம் சுழிக்கும் இத்தகைய பேச்சுகளை தவிர்ப்பது உங்கள் கட்சிக்கு நல்லது.
???
மேற்சொன்ன இரண்டு பேச்சுகளை பற்றி டிடிவி தினகரன் அளித்த பேட்டியை பார்த்தேன். அவரது பேச்சில் – (1) நம்ம ஊரை பத்தி நாம சொல்றதை விட்டுட்டு வெளிநாட்டுக்காரன் சொன்னதை எடுத்துக்கணுமா? என்று வைரமுத்துவின் மேற்கோளை சாடியதும் (2) எச்.ராஜாவின் எதிர்வினை பற்றிய கேள்விக்கு “அவரை விடுங்க” என்று சட்டை செய்யாமல் தன் கருத்தை முன்வைத்ததும் (அத்தகைய உதாசீனம் எச்.ராஜா பேசிய விதத்திற்கு தக்க மரியாதை என்றே தோன்றுகிறது) “அட” போட வைத்தன. முத்தாய்ப்பாக, “பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை திட்டி பேசுவதால் சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியடைவார்களா?” என்று அவர் கேட்டபொழுது என் மனதில் ஓடியது இதுதான் – இவ்வளவு தைரியமாக, வெளிப்படையாக போலி மதச்சார்பின்மை பற்றி தமிழகத்தில் திராவிட அரசியல் பின்புலம் உள்ள எந்த தலைவரும் பேசியதில்லை. உங்கள் மீதான மற்ற விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு, உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
Comments
1. வைரமுத்துவுக்கு பதிவு வைத்த அதே கோரிக்கையை நானும் வைக்கிறேன். அவரின் ஆண்டாளைப்பற்றிய கட்டுரையை நீங்களேன் இணைப்பு கொடுக்கவில்லை. வெளிநாட்டுக்கட்டுரையை அவர் ஏற்றிக்கொண்டார் என்று எழதியிருக்கிறீர்கள்? கட்டுரையைக் காட்டுங்க்ள்; அலல்து அவர் ஏற்றுக்கொண்டார் என்று சொன்ன வாசகத்தைக் காட்டுங்கள்.
2. தினகரனுக்கும் திராவிட அரசியலுக்கும் தொடர்பேயில்லை. அவர் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர் அல்ல. அவரும் மன்னார்குடிப் பரமபரைக்கும் திராவிட கொள்கைகளுக்கும் தொடர்பேயில்லை. அப்படியிருக்க திராவிடப்பின்புலம் உள்ளவர்களில் இவரே முதன்முதலாக இப்படிப் பேசியிருக்கிறார் என்று ராயல் சல்யூட் எப்படி கொடுக்க முடியும்?
3. தினகரன் இப்போது ஒரு அரசியல்வாதி. அவருக்கு ஓரியக்கக் கொள்கைகள் என்று எவையுமே கிடையாது. தற்போது எதைச் செய்தால், தனக்கு அரசியல் ஆதாயம் என்று பார்க்கும் அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அவருக்குத் தமிழ் இலக்கியம் பற்றி என்ன தெரியும்?
4.எவர் அண்ணாவின் கொள்கைகளை ஏற்றாரோ அவரே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த்வர். அண்ணா எம்மதத்தையும் சேரவில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் கொள்கையை நாத்திக வாதத்திலிருந்து விலகிக் கொண்டு சொன்னார். ஆனால் மன்னார் குடி கும்பல் ஒரு சைவ கும்பல். தினகரன் கோயில் கோயிலாகச் செல்கிறார். எப்படி கூசாமல் அவர் திராவிட பாரம்பரியத்திலிருந்து வந்தவர் என்று சொல்ல முடிகிறது?
உங்கள் முதல் கேள்விக்கான காணொளியை இங்கே காண்க – "https://youtu.be/AC13VOeWdmY".
உங்கள் மற்ற மூன்று கேள்விகளுக்குமான பதில் –
நீங்கள் சுட்டிகாட்டியிருக்கிற அண்ணா சொன்ன திராவிடத்தை அவர் தொடங்கிய திமுகவிலேயே இன்று சொற்ப அளவில்தான் பின்பற்றுகிறார்கள். அப்படியிருக்க, தமிழகத்தின் இரண்டு முக்கிய திராவிட கட்சிகளில் ஒன்று என சொல்லப்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் (பதவிகளில்) இருந்த தினகரனை திராவிட அரசியல் பின்புலம் இல்லாதவர் என்று எப்படி சொல்வீர்கள்? ஒரு வாதத்திற்காக அதிமுக திராவிட கட்சி அல்ல என்று பேசினாலும், அது "திராவிட" பிம்பம் உள்ள கட்சி என்பதை மறுக்க முடியாது. அப்படி பார்த்தாலும், இதுவரை இந்த இரண்டு பெரிய கட்சிகளில் யாரும் பொதுவெளியில் பேச துணியாத ஒரு கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.
Hi, I help businesses boost their online presence with website optimization, engaging content, strategic social media, and high-quality blogs—starting at just $100 per month.
Ping me at Youronlinepresence2@outlook.com to discuss it further.
Hi, Are you looking for someone who can follow your complex business SOPs and work on them accordingly? I specialize in Back-office work and I can help you in the following ways:
1. Data Management Services: Data Entry, Data Processing, Data Cleansing, Data Conversion to different formats, Data Extraction, Data Verification and extraction
2. Financial Accounting Services: Account Payable, Receivables, Reconciliations, Invoice Factoring, Financial Statements, Creating Invoices.
3. E-Commerce Management: Order Processing, Product Add/Delete/Modify, Cart and Shop Management.
4. Custom Process Follow: Understanding your SOP, Software Data Entry, Medical Bill Entry, Form filling
Ping me on Dataentry756@outlook.com if you have any requirements right now.
Hi, This is Maddy. I am a bookkeeper. I can categorize your transactions of incomes/expenses and can handle bank reconciliations. I can work on any software that you use for accounting. My rates are USD 15 per hour.
Reply me on Bizassistance008@outlook.com to discuss further.